Ads Area

சம்மாந்துறையில் இடம் பெற்ற மாபெரும் பாரம்பரிய கலை விழாவும் இண நல்லிணக்க நிகழ்வும்.

கிழக்கு இளைஞர்கள் அமைப்பு, றிஸ்லி முஸ்தபா கல்வி அபிவிருத்தி அமைப்பு மற்றும் MYOWN நிறுவனத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாரம்பரிய கலை நிகழ்வு 2024.04.26 ம் திகதி வெள்ளிக்கிழமை சம்மாந்துறை பொது மைதானத்தில் கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் தலைவர், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தானீஸ் ரஹ்மத்துல்லாஹ் தலைமையில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக றிஸ்லி முஸ்தபா கல்வி அபிவிருத்தி அமைப்பின் தலைவர், மயோன் நிறுவனத்தின் பணிப்பாளர் றிஸ்லி முஸ்தபா கலந்து சிறப்பித்தார்.


கெளரவ அதிதியாக அம்பாறை மாவட்ட கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் A.L தெளபீக் அவர்களும், சிறப்பு அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச கலாசார உத்தியோகத்தர் றஸ்மி மூஸா, றிஸ்லி முஸ்தபா கல்வி அபிவிருத்தி அமைப்பின் செயலாளர், திடீர் மரண விசாரணை அதிகாரி A.H.அல்-ஜவாஹிர், சம்மாந்துறை கோரைக்கார் தமிழ் மகா வித்தியாலய அதிபர் S.எலங்கோபன், கவிதாயினி (Dr) ஜெலீலா முஸம்மில், மற்றும் கலை மன்றங்களின் தலைவர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து சிறப்பித்தனர்.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe