இஸ்லாத்தில் ஜம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையாகிய புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக செல்ல இருக்கும் சம்மாந்துறை பிரதேச செயலக உத்தியோகத்தர்களை வழியனுப்பும் நிகழ்வு (15) பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனிபா தலைமையில் பிரதேச செயலக கேட்பேர் கூடத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்(LLB), பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பி.எம் ஹுசைன் உட்பட உத்தியோகத்தர்கள் மற்றும் ஹஜ் பிரயாணம் செல்லும் உத்தியோகத்தர்களின் துனைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
எம்.எஸ்.எப் பஸ்லுனா (கிராம உத்தியோகத்தர்) ஏ.ஆர்.எப் லுபைறா (அபிவிருத்தி உத்தியோகத்தர்-காணிப் பிரிவு) கே.எம்.எஸ் ஜெபியா(சமூக சேவை பிரிவு) ஆகிய உத்தியோகத்தர்கள் இம் முறை புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஊடகப் பிரிவு.