Ads Area

வவுனியாவில் 5கிலோகிராம் கஞ்சவுடன் நபர் ஒருவரை கைது செய்த அதிரடிப்படையினர்.

வவுனியா புளியங்குளம் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் திடீர் சோதனை ஒன்றை நடாத்திய அதிரடிப்படையினர் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வைத்து நேற்றைய தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை பரிசோதனை செய்ததில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 5கிலோ 124 கிராம் உடைய கஞ்சா போதைப்பொருளை மீட்டுள்ளனர்.

 

வவுனியா செக்கட்டிப்பிளவு பகுதியை சேர்ந்த 26 வயதுடை இளைஞரே மேற்படி கைது செய்யப்பட்ட நபராவார் மேலதிக விசாரனைகளின் பின்னர் கைது செயப்பட்ட நபரை வவுனியா நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


விசேட அதிரடிப்படையின் புளியங்குளம் பிரிவு பொறுப்பதிகாரி விசேட அதிரடிப்படையின் பொலிஸ் பரிசோதகர் NMMR சியாவுல் ஹக் அவர்களின் தலைமையிலேயே இந்த நடவடிக்கை இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe