ஹிஷாம் இப்றாஹிம்.
ஏறாவூர் மாக்கான் மாக்கார் மாணவர்களின் முன்மாதிரி நேற்று நிறைவடைந்த கல்விப்பொதுத்ததராதர சாதாரண தரப்பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் ஏறாவூர் மீராகேணி மாக்கான் மாக்கார் தேசிய பாடசாலை மாணவர்கள் தங்களது பாடசாலையை சிரமதானம் செய்து சுத்தப்படுத்தி விட்டு சென்றுள்ளனர்.
இவ்வாறான முன்மாதிரி வரவேற்கப்பட வேண்டியதும் ஊக்குவிக்கப்பட வேண்டியதொன்றாகும். குறித்த மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சிறந்த கல்விமான்களாக மிளிர நல்வாழ்த்துக்கள்.
"ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்." திருக்குறள்