Ads Area

சம்மாந்துறைப் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் மீட்பு - பொலிஸார்.

 பாறுக் ஷிஹான்.


சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப்பகுதியில் பஜாஜ் டிஸ்கவரி ரக மோட்டார் சைக்கிளொன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.


சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜயலத் வழிகாட்டலில் பெருங்குற்றப்பிரிவு  பொறுப்பதிகாரி கே.சதீஷ்கர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் தகவலொன்றின் அடிப்படையில் இன்று குறித்த மோட்டார் சைக்கிளை மீட்டுள்ளனர்.


மீட்கப்பட்டுள்ள EP XJ 1724 என்ற இலக்கத்தகடு பொறிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் தற்போது சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.


மேலும் குறித்த மோட்டார் சைக்கிள் வேறு பகுதியிலிருந்து ஏதேனும் குற்றச்செயலுக்கு கொண்டு வரப்பட்டதா? அல்லது களவாடப்பட்ட மோட்டார் சைக்கிளா? எனப்பல்வேறு கோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe