Ads Area

சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் பயறு பயிர்ச்செய்கை வேலை திட்டம்.

கிராமிய பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக  விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பயறு பயிர்ச்செய்கை வேலை திட்டம் சம்மாந்துறை பிரதேச செயலகப்  பிரிவில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வேலைத் திட்டம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. 


இதன் ஆரம்ப நிகழ்வானது  கல்லைரச்சல் -2 கிராம சேவகர் பிரிவில்  மயில் ஓடை வட்டையில்   பிரதேச செயலாளர் S.L. முகம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.


இன் நிகழ்விற்கு  கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய விரிவாக்கல் நிலைய பொறுப்பதிகாரிகள் (சம்மாந்துறை, மல்வத்தை) விவசாய  போதனாசிரியர்,(மத்தி, மாகாணம்) பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் விவசாயிகளும் கலந்து சிறப்பித்தனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe