Ads Area

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா குழுவினரை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக் கொண்ட அநுர திஸாநாயக்க.

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க இன்று அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா (ACJU) உறுப்பினர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.


இந்த கலந்துரையாடலில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலை குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு அவர்களின் ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொண்டார்.


பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்கவுடன் NPP செயற்குழு உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத்தும் கலந்துரையாடலில் கலந்துகொண்டார்.


செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe