வலய மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய சம்மாந்துறை சபூர் வித்தியாலய மாணவ-மாணவிகள் கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சபூர் வித்தியாலய அதிபர் தலைமையில் இடம் பெற்றது.
வலய மட்டத்தில் நடாத்தப்பட்ட ஆங்கில மொழி தினபோட்டிகள், முஸ்லிம் கலாச்சார போட்டிகள் மற்றும் விஞ்ஞான போட்டிகளில் வெற்றிபெற்று மாவட்ட மட்ட போட்டிகளுக்கு தெரிவான மாணவர்களை கௌரவித்து ஊக்கப்படுத்தும் முகமாக பாடசாலையில் அதிபர் MBM. சாபிர் அவர்கள் குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்து மாணவ-மாணவிகளை கௌரவித்திருந்தார்.
அதே போல் இப்போட்டிகளுக்கு மாணவர்களை பயிற்றுவித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் பாடசாலைச் சமூகம் சார்பாக பாராட்டுக்களும் நன்றிகளும் தெரிவித்துக் கொண்டார்.