காலி கடற்கரையில் இருந்து சுமார் 270 கடல் மைல் (501 கி.மீ) தொலைவில் சென்ற கப்பலுடன் உள்ளூர் மீன்பிடி படகு மோதியதில் மூன்று இலங்கை மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.
விபத்தின் போது உள்ளூர் மீன்பிடி இழுவை படகில் ஏழு பணியாளர்கள் இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
நான்கு மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கரைக்கு கொண்டு வரப்படுவதாகவும் மேலும் மூவர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். காணாமல் போனவர்கள் 28, 43 மற்றும் 52 வயதுடைய கொஸ்கொட பகுதியைச் சேர்ந்தவர்கள்.
காணாமல் போன மீனவர்களை தேடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி துறைமுக பொலிஸார் மற்றும் இலங்கை கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி மூலம் - https://www.dailymirror.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.