Ads Area

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் 54 பங்களாதேஷ் நாட்டவர்களுக்கு மனிதாபிமான மன்னிப்பு வழங்கி நாடு கடத்த உத்தரவு.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பங்களாதேஷ் உள்நாட்டு பிரச்சனை நடந்த நேரத்தில் ஆதரவு தெரிவிக்கும் விதமாக பொது இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போராட்டக்காரர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. இந்த தண்டனை மனிதாபிமான அடிப்படையில் அண்மையில் (03/09/24) ரத்து செய்யப்பட்டது.


மேலும் அபராதம் மற்றும் சிறைத்தண்டனையை தவிர்த்து அவர்களை நாடு கடத்த ஐக்கிய அரபு அமீரக அதிபர் உத்தரவிட்டார். இந்த வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், 54 பேருக்கு நாடு கடத்தவும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது குறிப்பிடதக்கது.


குவைத் உள்ளிட்ட எந்தவொரு வ‌ளைகுடா நாட்டிலும்  குடிமக்களை தவிர வெளிநாட்டினர் யாரும் போராட்டத்தில் ஈடுபட கூடாது என்பது கடுமையாக்கப்பட்ட சட்டமாகும்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe