பாறுக் ஷிஹான்.
தனியன் யானையொன்று திடீரென உட்புகுந்து மக்களின் குடியிருப்புக்களைத் தாக்கி சேதப்படுத்தியுள்ளது.
இன்று காலை அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை தமிழ்ப்பிரிவு 4 -குவாசி நீதிமன்றத்திற்கு முன்னாலுள்ள வீதியில் தனியன் யானையொன்று வீட்டுக்காணிகளில் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2 தினங்களாக தனியன் யானையொன்று சம்மாந்துறை நூலகம் குவாஸி நீதிமன்றப்பகுதிகளில் அட்டகாசம் செய்து சேதங்களை விளைவித்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தம்பட்ட அதிகாரிகள் இவ்விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.