Ads Area

2024 பொதுத் தேர்தலில் போட்டியிட இதுவரை மொத்தம் 33 சுயேச்சைக் குழுக்கள் வேட்புமனு தாக்கல் - தேர்தல் ஆணையம்.

2024 பொதுத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 33 சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல் ஆணையம் (EC) தெரிவித்துள்ளது.


நேற்றைய (8) வரை 17 அரசியல் கட்சிகளும் 16 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்து முடித்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு இதுவரை வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது அக்டோபர் 4 முதல் 11 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


செய்தி மூலம் - https://www.themorning.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe