Ads Area

சம்மாந்துறை பகுதி மல்வத்தையில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!

 சம்மாந்துறை நிருபர் தில்சாத் பர்வீஸ் 


தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை வேளையில் சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.


அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வள்ளுவர் புரம் மல்வத்தை 01 ஆம் பிரிவைச் சேர்ந்த 2 பிள்ளைகளின் தாயான நடராசா இந்திரகுமாரி (வயது 47) என்பவரே மரணமடைந்துள்ளார்.


கணவன் மனைவி இருவருக்குமிடையில் ஏற்பட்ட பிரச்சினையே சம்பவத்திற்கு காரணம் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


உயிரிழந்தவரின் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe