இதில் தென் கொரியாவின் ஜெஜூ விமானத்தில் பயணித்த 181 பேரில் 179 பேர் உயிரிழந்த நிலையில் 2 விமான உழியர்கள் மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இதேபோல் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய நேரத்தில் ஏர் கனடா ஃப்ளீட் ஏசி2259 என்ற விமானத்தின் ஒரு பக்க என்ஜினில் பயங்கரமாக தீப்பிடித்தது.
இதையடு்த்து அவசரமாக தரையிறங்கிய போது ஓடுபாதையில் சறுக்கி மோதி நின்றது. இந்த சம்பவத்தில் விமானத்தில் இருந்த சுமார் 80 பயணிகளுக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.
KLM Boeing 737-800 ரக KL1204 என்ற விமானம் ஓசேலோவில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் பலத்த சத்தத்துடன் ஹைட்ராலிக் செயலிழப்பு ஏற்பட்டது. Sandefjord Torp விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கும் போது கட்டுப்பாட்டை இழந்தது. தரையில் மோதி நின்றது. இதில் பயணித்த 176 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் உட்பட 182 பேரும் காயமின்றி உயிர் தப்பினர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் J2-8243 பயணிகள் விமானம் 62 பயணிகள் மற்றும் ஐந்து பணியாளர்கள் உட்பட 67 பேருடன் அவசரகால அடிப்படையில் தரையிறங்க முயற்சி செய்யும் போது விபத்தில் சிக்கி வெடித்து சிதறியதில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 38 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறி்ப்பிடத்தக்கது.