Ads Area

மருதமுனை கடற்கரைப் பகுதிகள் படுவேக கடலரிப்புப் பாதிப்பு.

 பாறுக் ஷிஹான்


மருதமுனை கடற்கரைப் பகுதிகள் விரைவாக கடலரிப்பிற்குள்ளாகி வருகின்றன. இப்பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்புக் காரணமாக தோணிகள், வள்ளங்கள் கரையை நோக்கி நகர்த்தப்பட்டு வருகின்றன.


மேலும், கடலரிப்பின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு, அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.


இப்பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு, காற்றின் திசை மாற்றம், நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள திசை மாற்றம், கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக குளிர்ச்சியாகக் காணப்படுகின்ற காரணங்களால் கடலலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதினாலும் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe