Ads Area

இரவு நேரங்களில் அதீத சத்தத்துடன் மோட்டார் சைக்கிள் ஓடும் இளைஞர் குழுக்களுக்கு பொலிசார் கடும் எச்சரிக்கை.

 பாறுக் ஷிஹான் 


காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட மாவடிப்பள்ளி பகுதியில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக மோட்டார் சைக்கிள் ஓடுபவர்கள், மது போதையில் வாகனம் செலுத்துபவர்கள், போக்குவரத்து விதிமுறைகள் மீறி வாகனம் செலுத்துபவர்கள் தலைக்கவசம் அணியாமல் ஓடுபவர்கள், வாகன அனுமதிப்பத்திரமில்லாமல் வாகனம் செலுத்துவோர் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள்  அதிரடியாகக்கைது செய்யப்பட்டுவர் என காரைதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர் எஸ்.ஜெகத் தெரிவித்தார்.


இன்று வெள்ளிக்கிழமை (17) மாவடிப்பள்ளி ஜும்ஆப்  தொழுகையைத்தொடர்ந்து பள்ளிவாசலுக்கு வருகை தந்த அவர் இவ்வாறு கருத்துத்தெரிவித்தார்.


மோட்டார் சைக்கிள்களில் சாகசங்கள் செய்தல், இரவு நேரங்களில் இளைஞர் குழுக்கள் பெரிய சத்தங்களுடன் மோட்டார் சைக்கிள் ஓடுதல், வீதியில் பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தல் போன்ற ஆபத்தை விளைவிக்கும் விதமாக மோட்டார் சைக்கிள்களைச் செலுத்துதல் என மக்களுக்கு இடையூறு விளைவித்து வருகின்றனர்.


மேலும், வீதிகளில் கூடி நிற்கும் வாலிபர்கள் சம்பந்தமாகவும் மற்றும் போதைப்பொருள் பாவனை, போதைப்பொருள் விற்பனை செய்பவர்களுக்கெதிராக எடுக்கப்படும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் மேற்படி நபர்களுக்கெதிராக பள்ளி நிர்வாகத்தால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும் பூரண தெளிவினை வழங்கினார்.


காரைதீவு பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஆர்..எஸ். ஜெகத் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, போக்குவரத்து விதிமுறைகள் சம்பந்தமாக இன்று மாவடிப்பள்ளி ஜும்ஆத் தொழுகையை தொடர்ந்து காரைதீவு பொலிஸ் பிரிவின் மாவடிப்பள்ளி பிரதேசத்திலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவர்.


இப்படிப்பட்ட ஆபத்துக்களை விளைவிக்கும் வகையில் காணுமிடத்து போக்குவரத்து பொலிஸாரினால் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்படும்.


அண்மையில் வீதி விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்களினால் பள்ளிவாசலுக்கு விசேட பயான் நிகழ்ச்ச்சிக்குச் சென்று வந்த இரு பெண்கள் வீதி விபத்துக்குள்ளாக்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe