(பாறுக் ஷிஹான்)
ஹெரோயின் போதைப்பொருளுடன் நடமாடிய இளைஞனை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர்ப்பகுதியில் வியாழக்கிழமை (2) இரவு சந்தேகத்திற்கிடமாக நடமாடிய இளைஞனை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இரகசியத்தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், கைதான சந்தேக நபரிடமிருந்து 1,900 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டிருந்தது.
மேலும், சந்தேக நபர் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்த சம்மாந்துறை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்மாந்துறை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி கே.டி.எஸ்.ஜெயலத்தின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸார் இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.