சம்மாந்துறை உடங்கா 02 கிராம சக்தி மஹா சங்கத்தினரின் இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 77வது சுதந்திர தின நிகழ்வு சங்கத்தின் தலைவர் ஜனாப் எம்.ஐ.எம். றிஸ்விகான் தலைமையில் கிராம சேவகர் காரியாலயத்தில் இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
தேசியக்கொடி ஏற்றல் நிகழ்வுடன் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் சிரமதான நிகழ்வு இடம்பெற்றதோடு, மர நடுகை நிகழ்வும் இடம் பெற்றது. மேலும் இந் நிகழ்வில் நாட்டு மக்களுக்கு சபீட்சம் வேண்டி துஆப் பிராத்தனையும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில், உடங்கா 02 கிராம சக்தி மஹா சங்கத்தின் தலைவர் எம்.ஐ.எம். றிஸ்விகான், பிரதேச கிராம சேவகர் எம்.ஐ.அஸீனா, கிராம பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எல். நிஹாறா, ஜமாலியா பள்ளிவாசலின் கண்ணியத்திற்குரிய மௌலவி ஷாக்கீர், மஹா சங்க ஏனைய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.