Ads Area

இளைஞர்களுக்கு போதை மாத்திரை விநியோகம் : 700 மாத்திரைகளுடன் இளைஞன் கைது.

 பாறுக் ஷிஹான்.


போதை மாத்திரைகளை நீண்டகாலமாக  இளைஞர்களுக்கு விநியோகம் செய்து வந்த 29 வயது சந்தேக நபரை பெரியநீலாவணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம்  மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது செவ்வாய்க்கிழமை (22) இரவு அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிலுள்ள மருதமுனை புறநகர்ப்பகுதியில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.


இதன் போது, சுமார் 700க்கும் அதிகமான போதை மாத்திரைகளை தன்வசம் வைத்திருந்த 29 வயது சந்தேக நபர் கைதானார்.


சந்தேக நபர்  உள்ளிட்ட  சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில்  பெரியநீலாவணை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க வழிநடத்தலில் பொலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe