Ads Area

இந்தியாவில் இருந்து 3,050 டன் உப்பு இன்று இரவு இலங்கைக்கு வருகிறது.

தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு தீர்வாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உப்பு இன்று இரவு இலங்கைக்கு வர உள்ளது என வர்த்தக, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.


3,050 மெட்ரிக் டன் உப்பு இன்று இரவு (மே 21) நாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.


தனியார் துறையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 250 மெட்ரிக் டன் உப்பும், தேசிய உப்பு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்படும் 2,800 மெட்ரிக் டன் உப்பும் இதில் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் மாதாந்திர உப்பு தேவை 15,000 மெட்ரிக் டன் ஆகும், மேலும் ஆண்டு தேவை 180,000 மெட்ரிக் டன் உப்பு ஆகும்.


இலங்கையில்  உப்பானது யால மற்றும் மகா என இரண்டு பருவங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது. யால பருவ அறுவடை பிப்ரவரி நடுப்பகுதியிலிருந்து ஏப்ரல் நடுப்பகுதி வரையிலும், மகா பருவ அறுவடை ஜூன் நடுப்பகுதியிலிருந்து அக்டோபர் நடுப்பகுதி வரையிலும் இருக்கும்.


இருப்பினும், கடந்த ஆண்டு சிறு, மகா பருவங்களில் பெய்த கனமழை காரணமாக, எதிர்பார்த்த அளவு உப்பு உற்பத்தி செய்யப்படாததால், நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய உப்பு இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe