Ads Area

நேற்று பதுளை பேருந்து நிலையத்தில் இடம்பெற்ற வெட்டுக்-குத்து சம்பவம் தொடர்பில் பொலிஸார் விளக்கம்.

தனது மூத்த சகோதரரை கத்தியால் வெட்டிய சம்பவத்தில் படுகாயமடைந்த 48 வயது நபர் தற்போது பதுளை பொது மருத்துவமனையில் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருகிறார்.


நேற்று பதுளை பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள ரோயல் சாலைக்கு அருகிலுள்ள நடைபாதையில் இந்த வெட்டுக்குத்து சம்பவம் நிகழ்ந்துள்ளது.


சம்பவம் நடைபெற்ற போது அருகில் பணியில் இருந்த பொலிஸ் சார்ஜென்ட் நிலந்த, தனது உயிருக்கு ஆபத்து இருந்த போதிலும், தாக்குதல் நடத்தியவரை கட்டுப்படுத்தி கைது செய்துள்ளார். பொலிஸ் சார்ஜென்ட் நிலந்தவின் இந்த நடவடிக்கை பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது.


முதற்கட்ட விசாரணையில்,  முன் விரோதம் காரணமாக இளைய சகோதர் முதலில் மூத்த சகோதரனைத் முன்னர் கத்தியால் வெட்டி தாக்கியதாகவும் அதற்குப் பழி தீர்க்கவே நேற்று மூத்த சகோதரர் இளைய சகோதரரை பேருந்து நிலையத்திற்கு அருகிவல் வைத்து கத்தியால் வெட்டியதாகவும்   போலீசார் தெரிவித்துள்ளனர்.


இருவரும் காயமடைந்து, காவல்துறை கண்காணிப்பின் கீழ் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த இருவரும் பதுளை பகுதியில் உள்ள அமுனுபிட்டியவைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.


சம்பவம் குறித்து பதுளை போலீசார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe