Ads Area

கல்முனைப் பிராந்தியத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை : 82 பேருக்கு சட்டநடவடிக்கை

 பாறுக் ஷிஹான்.


அம்பாறை மாவட்டம், கல்முனைப் பிராந்தியத்தில்    விசேட போக்குவரத்துப்பொலிஸாரினால் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


இத்திடீர் சோதனை நடவடிக்கையானது, கல்முனை புறநகரப்பகுதி முதல் சாய்ந்தமருது புறநகர் கடற்கரை வீதி  போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.


இத்திடீர் சோதனையில், சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாகச்செல்வது, மிக ஒலி எழுப்பிய மோட்டார் சைக்கிள்கள் தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு, வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகளும் பொலிஸாரினால் வழங்கப்பட்டன.


இச்சோதனை நடவடிக்கையானது, அம்பாரை மாவட்ட  கல்முனை பிராந்திய உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸார் வழிகாட்டலில் இடம்பெற்றது.


இதன் போது, கல்முனை, சம்மாந்துறை, சவளைக்கடை, சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொலிஸார் இணைந்து  முக்கிய சந்திகள், பிரதான புறநகர வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.


குறிப்பாக, இச்சோதனை நடவடிக்கையின் போது 82  பேர் மேற்கூறிய குற்றங்களுக்காக தண்டப்பணம் விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe