சம்மாந்துறை உடங்கா 02 பகுதியில் மக்கள் செறிந்து வாழும் குடியிருப்பு பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களினால் கொட்டப்பட்ட மாட்டுக் கழிவுகள் பிரதேச சபை உறுப்பினர் ரிஸ்விகானினால் அகற்றம்.
இப் பிரதேசத்தில் இனந்தெரியாத சில நபர்களால் மாட்டு கழிவுகள் வீசப்பட்டுள்ளமையினால் மக்கள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்பட்டு தமது வீடுகளில் இருக்க முடியாத துர்நாற்ற சூழ்நிலையும் ஏற்பட்டமையினால் இது தொடர்பில் செய்தியறிந்த சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் களத்திற்கு சென்று பிரதேச சபையின் உதவியுடன் குறித்த கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
இனிமேல் தயவு செய்து யாராக இருந்தாலும் இறைவனுக்காக இவ்வாறான மோசமான செயல்களை செய்ய வேண்டாம். மேலும் இச் செயல்களை செய்பவர்கள் யாராக இருந்தாலும் இனங்கானப்படுமிடத்தில் எந்த வித தயவு தாட்சமுமின்றி கடும் நடவடிக்கைக்கு உள்ளாக்க படுவீர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.