குவைத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை குவியல் குவியலாக நாட்டிற்குள் கடத்தும் முயற்சியை சுங்கத்துறை அதிகாரிகள் வெற்றிகரமாக முறியடித்தது. சுங்க சோதனைகளைத் தவிர்ப்பதற்காக நாட்டின் Shuaiba துறைமுகம் வழியாக வந்த ஒரு கப்பலின் உள்ளே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அறைகளில் மறைக்கப்பட்ட பெட்டிகளில் கடத்தல் பொருள் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்டது.
சந்தேகமடைந்த சுங்க அதிகாரிகள் நவீன தொழில்நுட்பமுடைய மேம்பட்ட திரையிடல் உபகரணங்களை பயன்படுத்தி முழுமையாக ஆய்வு செய்த போது சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட புகையிலை பொருட்களை கொண்ட ரகசியப் பெட்டிகளை கண்டுபிடித்தனர். இதையடுத்து இதை பெறுவதற்காக துறைமுகத்திற்கு வந்த இந்தியரான ஒருவரை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இந்த நபர் தொடர்பான கூடுதல் விபரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.