மே 6 ஆம் தேதி தனியார் ஜெட் விமானத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இலங்கை திரும்பிய விடையம் இன்று நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பயணத்திற்கு யார் நிதியளித்தார்கள் என்பது குறித்து விளக்கமும் கோரியிருந்தனர்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்திடம், ஜனாதிபதி பயணித்த தனியார் ஜெட் விமான பயணம் தொடர்பான செலவினை வியட்நாம் அரசாங்கம் ஏற்றுக் கொண்டதா..??? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, நாடு திரும்பும் விமானத்திற்கு வியட்நாம் அரசாங்கம் அல்ல, ஐ.நா.வுடன் இணைந்த வியட்நாம் பௌத்த சங்கமே நிதியளித்தது என்று அமைச்சர் ஹேரத் தெளிவுபடுத்தினார்.
வாக்களிக்க இலங்கைக்குத் திரும்ப வேண்டியதன் அவசியத்தைக் காரணம் காட்டி, ஜனாதிபதி திசாநாயக்க ஆரம்பத்தில் ஐ.நா. வெசாக் விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள மறுத்துவிட்டார் என்று அவர் விளக்கினார். "இருப்பினும், பௌத்த சங்கத்தால் பயண ஏற்பாடுகள் வழங்கப்பட்ட பிறகு, அவர் பங்கேற்க ஒப்புக்கொண்டார்," என்று அமைச்சர் கூறினார்.
இந்தப் பயணத்தில் இலங்கையின் பொது நிதி எதுவும் செலவிடப்படவில்லை என்று அமைச்சர் ஹேரத் பாராளுமன்றத்திற்கு உறுதியளித்தார். முந்தைய அறிக்கைகள் வியட்நாம் அரசாங்கத்தின் ஈடுபாட்டைக் குறிப்பிட்டாலும், பயணம் அரசாங்கத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு வியட்நாமில் உள்ள ஐ.நா.வுடன் இணைந்த பௌத்தக் குழு மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.