(எம். என்.எம்.அப்ராஸ்)
வர்த்தக,வாணிப,உணவுப்பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அம்பாறை மாவட்ட செயலக நூகர்வேர் அலுவல்கள் அதிகார சபையினால் பாடசாலை உயர்தரப்பிரிவு மாணவர்கள் மத்தியில் நூகர்வோர் அதிகார சபையின் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சம்மாந்துறை முஸ்லீம் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி பாடசாலை அதிபர் ஏ.ஆர்.எம்.உவைஸ் தலைமையில் மற்றும் வர்த்தக, கலைப்பிரிவுப் பகுதித் தலைவர் கியாஸ் வழிகாட்டலில் (07) இடம்பெற்றது.
இதன் போது நூகர்வோர் உரிமைகள், பொறுப்புக்கள், சட்டங்கள், பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் சம்பந்தமாக மாணவர்களுக்கு விளக்கக்காட்சியூடாக தெளிவுபடுத்தப்பட்டது.
இவ்விழிப்புணர்வு நிகழ்சிக்கு பிரதான வளவாளராக நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர் முஹம்மட் ஸாஜீத் ஸமான் கலந்து கொண்டதுடன், உயர்தர வர்த்தக பிரிவு ஆசிரியார்களும் கலந்து கொண்டனர்.