இந்திய தமிழ் நாட்டு மக்களால் வழங்கப்பட்ட வெள்ள நிவாரண உலர் உணவு பொதிகளை சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட தொடர்ச்சியாக வெள்ளத்தினால் பாதிப்படைகின்ற நெய்னாகாடு கிராமம் மற்றும் ஏனைய பாதிப்படைந்த குடும்பங்களுக்கும் அண்மையில் (19) சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர் எஸ்.எல்.சர்த்தர் மிர்ஸா,சமூக சேவை உத்தியோகத்தர் அ.அகமட் சபீர், அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர் எம்.எஸ் அஸாருத்தீன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பெளஸ், கிராம சேவகர் ஏ.எல் எம்.பரீட், அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். ரிபாஸ் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.





