முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இன்று (05) காலை லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானார்.
முந்தைய அரசாங்கத்தின் போது விவசாய அமைச்சை நிறுவுவதற்காக ராஜகிரியவில் வாடகை அடிப்படையில் கட்டிடம் வாங்கியது குறித்து லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.
அதன்படி, அப்போதைய அரசாங்கத்தின் போது அமைச்சரவையில் அமைச்சராகப் பணியாற்றிய முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இன்று லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானார்.
அதன்படி, இன்று காலை அவர் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜரானார்.
செய்தி மூலம் - https://sinhala.adaderana.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.

