சம்மாந்துறை வீரமுனை வட்டாரத்தைப் பிரதிநித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினரான கௌரவ றிஸ்விகான் அவர்கள் தனது வட்டாரத்தில் தேர்தல் காலங்களில் தனது வெற்றிக்காக பாடுபட்ட வட்டார பிரதேச மக்களை ஒவ்வொரு மாதமும் ஒன்று கூட்டி அவர்களிடம் வட்டாரத்திற்கான தனது செயற்பாடுகள், வேலைத்திட்டங்கள், மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் உத்திகள் தொடர்பில் கலந்துரையாடும் ஒரு வேலைத்திட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.
இந்நிலையில் எதிர்வரும் 2026-04-07 அன்று நடைபெறவுள்ள சம்மாந்துறை பிரதேச சபையின் பத்தாவது சபை அமர்விற்கு முன்னதாக தனக்கு வாக்களித்த வட்டார மக்களுடனாான கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றினை பிரதேச சபை உறுப்பினர் றிஸ்விகான் 2026-04-04 அன்று அவரது இல்லத்தில் பிற்பகல் 6 மணியளவில் ஏற்பாடு செய்து அதில் தனது வட்டாரப் பிரச்சினைகள் குறித்து மக்களோடு கலந்தாலோசனை செய்துள்ளார்.
இந் நிகழ்வில் தான் சார்ந்திருக்கும் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியினுடைய எதிர்கால அரசியல் வெற்றிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் பாடுபட வேண்டியதன் அவசியம் குறித்தும் மக்களுக்கு தெளிவுபடுத்திய அதே வேளை, அண்மையில் அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் தலைவர் ரிஷாத் பதியூத்தீன் அவர்களினால் பேசப்பட்ட கட்சி சார்ந்த விடையங்களும் மக்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.
இக் கலந்துரையாடல் நிகழ்விற்கு வீரமுனைப் வட்டாரத்தில் தனது வெற்றிக்காக பாடுபட்ட சகல துறை சார்ந்த மக்களையும் ஒன்று கூட்டி தனது அரசியல் செயற்பாடு, வட்டாரத்திற்கான தனது வேலைத்திட்டங்கள் தொடர்பில் எவ்வித ஒழிவு-மறைவின்றி மக்களோடு கலந்துரையாடி சபை அமர்வில் பேசவிருக்கும் விடையங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து, வாக்களித்த மக்களின் கருத்துக்களும் கோரப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட மக்களில் சிலர் கட்சிப் பணிகள் தொடர்பிலும், கட்சியின் அரசியல் நகர்வுகள் தொடர்பிலும் மற்றும் வட்டாரப் பிரச்சினைகள், தேவைகள் தொடர்பிலும் எழுப்பிய கேள்விகளுக்கு பிரதேச சபை உறுப்பினர் றிஸ்விகான் அவர்களினால் விளக்கமும் அளிக்கப்பட்டது. கலந்து கொண்ட மக்கள் பிரதேச சபை உறுப்பினர் றிஸ்விகான் அவர்களோடு இணைந்து எதிர்கால கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுவதாகவும் உறுதியளித்தனர்.









