Ads Area

நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 வயது இளைஞன் உயிரிழப்பு.

 பாறுக் ஷிஹான்.


பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.


அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் போதைப்பொருள் தொடர்பில் கைதான நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 23 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.


இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (5) இரவு இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


இச்சம்பவம் தொடர்பில் நிந்தவூர் பொலிஸ் நிலையத்திற்கு உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் வருகை தந்துள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


கைதான சந்தேக நபர் போதைப்பொருள் உட்கொண்டு உயிரிழந்தாரா? அல்லது தடுத்து வைக்கப்பட்ட வேளை பொலிஸாரினால் தாக்கப்பட்டு உயிரிழப்பு இடம்பெற்றதா? எனப்பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் குறிப்பிட்டார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe