Ads Area

உள்ளுராட்சி தேர்தலும் சம்மாந்துறையும்....


மாஹிர் முகைடீன்.

காலம் காலமாக அரசியல் வாதிகளின்  சுய நலத்தினாலும், பொடுபோக்குத் தன்மையினாலும்  புறக்கணிக்கப்பட்டு இன்றும் பிரதேச சபையாக இருக்கின்ற சம்மாந்துறைப் பிரதேச சபை இன்று முஸ்லீம் காங்கிரசின் கையில் இருந்து மக்கள் காங்கிரசின் கைக்கு மாறக்கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதற்கு  காரணம் என்ன ???

 ஏறாவூர், கிண்ணியா, காத்தான்குடி ,அக்கரைப்பற்று, அம்பாறை இந்த ஊர்கள் மாநகர சபையாகவும், நகர சபையாகவும் இருக்கும் இடத்தில் இவை அனைத்தையும்  விட சனத்தொகையிலும், பரப்பளவிலும் கூடிய சம்மாந்துறை ஏன் இன்னும் பின்தங்கிய பிரதேச சபையாக இருக்கின்றது  ??? இதைப்பற்றி எப்போதாவது எமது அரசியல் வாதிகள் சிந்தித்து இருப்பார்களா ???

அக்கரைப்பற்று மாதிரி சம்மாந்துறையையும் ஒரு மாநகர சபையாகவும், பிரதேச சபையாகவும் பிரித்திருந்தால் இன்றைக்கு முஸ்லீம் காங்கிரஸ் ஒரு சபையையாவது தன் வசம் வெற்றிகொள்ள வாய்ப்புக்கள் அதிகம் ஆனால் அவர்கள் அப்படி செய்யாததனால் இன்று அவர்கள் ஓரம் கட்டப் பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் இதட்கு யார் காரணம் ??? எல்லாவற்றையும்  ஆறுதலாக செய்ய நினைப்பவர்களுக்கு இதுதான் கதி !!!

றிசாத் பதியுத்தின் சம்மாந்துறையில் ஒரு கைத்தொழில் பேட்டை ஒன்றை விரைவில் ஆரம்பிக்க இருப்பதாகத்தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன அப்படி ஒன்று வருவது சம்மாந்துறையின் சரித்திரத்தை மாற்றக்கூடிய ஒன்றாகும். இப்படி மக்கள் காங்கிரஸ் சம்மாந்துறையின் தேவை அறிந்து சேவை செய்தால் அவர்கள் சம்மாந்துறையில் ஆட்சியைப் பிடிப்பது நிச்சயம்.

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe