நன்றி - காரைதீவு சகா.
எமது வலையத்தில் உள்ள 24275 மாணவர்களுக்குமான சீருடைத் துணி வவுச்சர்களை உடனடியாக அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்மாந்துறை வலையக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். ஸஹீதுல் நஜீம் அதிபர்களைப் பணித்துள்ளார்.
சம்மாந்துறை வலையத்தில் உள்ள 71 பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்களுக்கான அவசர கூட்டத்தில் வைத்து இந்த அறிவித்தலை அவர் விடுத்திருந்தார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இறக்காம கோட்டத்தில் உள்ள 3672 மாணவர்களுக்கும் நாவிதன் வெளிக் கோட்டத்தில் உள்ள 4773 மாணவர்களுக்கும், சம்மாந்துறைக் கோட்டத்தில் உள்ள 15830 மாணவர்களுக்கும் இன்று சீருடை வவுச்சர்கள் தங்களிடம் வழங்கப்படுகின்றன இவற்றினை முடியுமானவரை தாமதியாது மாணவர்களுக்கு வழங்குபடி கேட்டுக் கொண்டார்.