எம்.ரீ. அஸ்மிர்.
கலப்புத் தேர்தல் முறையின் அடிப்படையில் 2018ல் நடைபெறும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வட்டாரங்களானது இரண்டு அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது.
1. தனி அங்கத்துவ வட்டாரம்
2. பல் அங்கத்துவ வட்டாரம்
பல் அங்கத்துவ வட்டாரமானது 2 அல்லது 3 உறுப்பினர்ளைத் தெரிவு செய்கின்ற வட்டாரமாக காணப்படுகின்ற அதேவளை அவ்வட்டாரத்தில் எந்தக் கட்சி / சுயேற்சை குழு கூடுதல் வாக்குளை பெறுகின்றதோ அக் கட்சி /குழுவிற்கே சகல ஆசனங்களும் வழங்கப்படும் என குறித்த தேர்தல் சட்டம் குறிப்பிடுகின்றது.
முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்டு காணப்படும் சம்மாந்துறை உள்ளூராட்சி மன்றமானது 2017ஆம் ஆண்டைய வாக்காளர் இடாப்பிற்மைய 44271 வாக்காளர்ளை கொண்டுள்தோடு 10 வட்டாரங்களில் இருந்து தெரிவு செய்யப்படுகின்ற 12 உறுப்பினர்ளையும், 8தெரிந்தெடுத்து அனுப்பப்பட வேண்டிய (விகிதாசார அடிப்டையில்) உறுப்பினர்கள் அடங்கலாக மொத்தமாக 20 உறுப்பினர்ளை கொண்டமைந்துள்ளது.
வீரமுனை வட்டாரமானது 3 உறுப்பினர்ளை தெரிவு செய்கின்ற பல் அங்கத்துவ வட்டாரமாக காணப்படுவதுடன் 9 கிராமசேவகர் பிரிவுளை உள்ளடக்கிய 6569 வாக்காளர்ளை கொண்மைந்துள்ளது.
இதில்
(அ) வீரமனை 1,2 – 897
(ஆ) வீரமனை 3,4 – 937
(இ) சம்மாந்தறை 11,12 – 990
(ஈ) உடங்கா 1 - 1307
(உ) உடங்கா 2 – 1105
(ஊ)சென்னல் கிராம்ம் 1 – 1333
வாக்காளர்ளையும் கொண்டு காணப்படுகின்றது.
இதில் அன்னளவாக
1) 1897 தமிழ் வாக்குகளும்
2) 4672 முஸ்லிம் வாக்குகளும் காணப்படுகின்றன.
தமிழ் சமூகமானது அம் மூன்று உறுப்பினர்ளையும் பெற்றுக் கொள்ளும் நோக்கில் தங்களது வாக்குளை தனி ஒரு கட்சிக்கே அளிப்பதற்கான முயற்சிளை மேற்கொள்கின்றனர். ஆனால் எமது முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் பல்வேறு கட்சிகள் களமிறங்குவதால் குறித்த வட்டாரத்தில் முஸ்லிம் வாக்குகள் சிதறடிக்கப்பட்டு எமக்குரிய பிரதிநிதித்துவத்தை நாம் இழக்கநேரிடும்.
இவ்விழப்பின் காரணமாக தமிழ் சமூகமானது மொத்தமாக மல்வத்தை, வளத்தாபிட்டி வட்டாரம் உட்பட 5 உறுப்பினர்ளையும், விகிதாசார அடிப்டையில் 1 அல்லது 2 உறுப்பினர்ளையும் பெற்று மொத்தமாக 6/7 ஆசனங்களுடன் நிபந்னையின் அடிப்டையில் எனது இரு கண் போனாலும் எதிரியின் ஒரு= கண்னு.........போகவேண்டும் என நினைப்பவர்ளை கொண்டு ஆட்சியமைக்க நேரிடும்.
எனவே வீரமுனை வட்டார முஸ்லிம் வாக்காளர்ளே, சிந்தித்து தனி ஒரு கட்சிக்கோ / குழுவிறகோ வாக்களியுங்கள்.