நன்றி - ஜலீல் ஜீ.
சம்மாந்துறை பாவலர் பஸீல் காரியப்பர் ரசிகர் வட்டத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறையின் கலை-இலக்கியவாதிகளை சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லுாரியில் (30-12-2017) இடம்பெற்றது.
சிரிலங்கா மனிதநேய நற்பணிப் பேரவையின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் இர்சாட் ஏ காதர் முன்னிலையில் சிரிலங்கா பாவலர் பஸீல் காரியப்பர் ரசிகர் வட்டத்தின் ஸ்தாபகத் தலைவர் தேச மான்ய ஜலீல் ஜீ அவர்கள் தலைமையில் இந் நிகழ்வு இடம் பெற்றது.
இதில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் றமீஸ் அப்துல்லா, கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ. அப்துல் நிஸாம், சிறப்பு அதிதிகளாக சம்மாந்துற மஜ்லிஸ் சூரா சபைத் தலைவர் அஷ்ஷெக் எம்.ஐ.எம்.அமீர், நம்பிக்கையாளர் சபைத் தலைவர் கே.எம்.முஸ்தபா, பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம் ஹனீபா, ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் மர்ஹம்களான ஓய்வு பெற்ற அதிபர்கள் யூ.எம். முஸ்தபா, ஏ.அமீர், எஸ்.எச்.எம். முஸ்தபா ஆகியோர் பற்றி நினைவுச் சுவடிகளும் வெளியிடப்பட்டது.