Ads Area

வளத்தாப்பிட்டியில் யானைகளின் தொல்லை : அச்சத்தில் மக்கள்.

நன்றி - காரைதீவு சகா.

வளத்தாப்பிட்டியில் அண்மைக் காலமாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதனால் அப்பிரதேச மக்கள் மிகவும் அச்சத்தில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பொழுதைக் கழிப்பதாக வளத்தாப்பிட்டி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் த.காந்தன் தெரிவித்துள்ளார்.

நேற்று மறுநாள் (24) மக்களின் குடியேற்ற பிரதேசத்திற்குல் புகுந்த யானைகள் குடிசைகள் மற்றும் பயிர்கள் அத்தனையையும் துவம்சம் செய்துள்ளது.

வேளாமை அறுவடை நிறைவுறும் காலமென்பதால் யானைகள் ஊருக்குல் நுழைந்து மிகவும் அட்டகாசம் செய்யத் தொடங்கியுள்ளது. ஏழை மக்களின் குடிசைகளை, தென்னம் பிள்ளை, வீட்டு மதில்கள் மற்றும் பயிர்கள் என அத்தனையையும் இந்த யானைகள் நாசம் செய்துள்ளதனை படத்தில் அவதானிக்கலாம்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe