IIFAS அமைப்பினால் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்ற கல்வி மற்றும் மார்க்க கருத்தரங்குகளின் வரிசையில், அண்மையில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயத்தில் ஷரீயா தொடர்பான இஸ்லாமிய கருத்தரங்கொன்று நடத்தப்பட்டிருந்தது. இந் நிகழ்வில் மிக முக்கியமான மார்க்க அறிஞர்கள் கலந்து விரிவுரையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று, அதில் கலந்துகொண்டிருந்த மாணவர்களுக்கான சான்றிதழ்களும், பரிசில்களும் IIFAS அமைப்பினால் வழங்கப்பட்டிருந்தது. இந் நிகழ்வில் பிரதி அதிபர் உவைஸ் நளீமி உட்பட பாடசாலையின் ஆசிரியர்கள் பங்குபற்றி இருந்தனர்.
துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை









