(எம்.ஜே.எம்.சஜீத்)
அட்டாளைச்சேனை 06 ஆம் பிரிவில் உள்ள சேர் றாசீக் பரீட் வீதி காபேட் வீதியாக மாற்றப்படும் நிகழ்வு இன்று (18) கிழக்கு மாகாண முன்னாள் வீதி அபிவிருத்தி அமைச்சரும், அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான கௌரவ எம்.எஸ். உதுமாலெப்பை (ஜேபி) அவர்களினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் எம்.எஸ்.எம்.ஜஃபர், அம்பாறை வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் பீ.ராசமோகன், பொறியியலாளர் திரு.கதிசன், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் செயலாளர் ஜனாப். லியாகத் அலி, மற்றும் பிரதேச உறுப்பினர்களான ஏ.எல். அஜ்மயில், எஸ். ஜாஸ்மின், ஜெமிலா ஹமீட் உட்பட கல்விமான்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.