Ads Area

வங்கக்கடலில் புதிய காற்றழுத்தம்.


தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாகவும், எனினும் இந்த தாழ்வுப்பகுதி புயலாக மாற வாய்ப்பு இல்லை எனவும் கூறினார். சென்னையை பொறுத்தவரை அவ்வப்போது மிதமான மழை பெய்யும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், அடுத்த 24 மணி நேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றார். படிப்படியாக உள்மாவட்டங்களில் மழை பெய்யும் என குறிப்பிட்ட அவர், இன்றும், நாளையும் தென் கிழக்கு, தென் மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என தெரிவித்தார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe