ஓசரில் நடந்த ஆணவப் படுகொலைகளை கண்டித்து எதிர்வரும் 20.11.2018 காலை 10 மணிக்கு என் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துக்கொள்கிறோம்.
ஓசூர் அருகே உள்ள சூடண்டியபள்ளிச் சேர்ந்த நந்தீஸ்-சுவாதி இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் காதல் திருமணம் செய்து கொண்டிருந்தனர். தலித் சமூகத்தைச் சார்ந்த இளைஞரைத் திருமணம் செய்துகொண்டிருப்பதற்கு சுவாதியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஓசூர் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த நந்தீஸ்-சுவாதி இருவரும் கடந்த பத்தாம் தேதியில் இருந்து காணவில்லை என அவரது உறவினர்கள் காவல்துறையினருக்கு புகார் அளித்தனர்.
இதற்கிடையில் நந்தீஸ் -சுவாதி அக்காரோவின் சடலங்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டம் சிவனசமுத்திரம் என்ற இடத்தில் காவிரி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கம்பியால் கைகள் பின்புறமாக வைத்து கட்டப்பட்ட நிலையில் அந்த சடலங்கள் போலீசாரால் மீட்கப்பட்டது. இது தொடர்பாக சுவாதியின் தந்தை மற்றும் சில உறவினர்களைப் போலீசார் கைது செய்துள்ளது.
ஆனால், கொலை நடந்திருப்பதைப் பார்க்கும் போது திட்டமிட்ட முறையில் கூலிப்படையினரின் உதவியோடு இக்கொலை நடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. எனவே, இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து வழக்கு முடியும் வரை அவர்களுக்கு ஜாமீன் வழங்காமல் விரைவு நீதிமன்றத்தில் வழக்குை விசாரித்து அதிகபட்ச தண்டனையை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவல்துறையை வலியுறுத்துகிறோம்.
தமிழ்நாட்டில் கூலிப்படை கலாச்சாரம் பெருகிவிட்டேன், மகாராஷ்டிரா கர்நாடகா முதற்கொண்டு மாநிலங்களில் அதன் சாரேக் கடுமையாக சட்டம் இருப்பதைப்போல தமிழ்நாட்டிலும் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்னால் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டுமென்ற தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஆணவக்கல்கள் அதிகரித்து வருகிற. இத்தகைய குற்றங்களுக்கு சிலர் அரசியல் லாபம் கருத்தி செய்துவரரும் வெறுப்பு பிரச்சாரமே காரணம். அதுமட்டுமில்லாமல் தமிழ்ந அரசு இதில் காட்டிவன
மெத்தனம் அப்படியவர்களுக்கு ஊக்கம் வழங்கிப்பதாக உள்ளது என்று சுட்டிக்காட்டுகிறோம்.
2016 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் அவர்களால் வழங்கப்பட்ட தீர்ப்பில் தமிழ்நாட்டில் 47 ஆணவர்களின் படுகொலைகளை பட்டியலிட்டுக் காட்டியிருந்தார். ஆணவக் கொலைகளைத் தடுக்க தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் ஒன்பது கட்டளைகளுக்கும் அவர் அளித்திருந்தார்.
27.03.2018 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பில், "கலப்புமணத் தம்பதிகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்பாக வரவிருக்கும் புகார்களைப் பெறவும் விசாரிக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.பி., மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட அதிதிராவிட நலத்துறை அதிகாரி ஆகியோர் உள்ளடங்கிய ஒரு சிறப்பு பிரிவு மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்; இந்த சிறப்பு பிரிவுகளில் 24 மணிநேர ஹெல்ப்லைன் வசதி இருக்க வேண்டும்; ஆணவக் குற்றங்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் இதுவாக உருவாக்கப்படும் விரைவு நீதிமன்றங்களில் விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும் "என உத்தரவிட்டார்.
ஆணவக் கொலைகளை கட்டுப்படுத்த சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இதுவரை பின்பற்றவில்லை. அது இனிமேலாவது அவற்றைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக சக்திகளும் பெருமளவில் பங்கேற்க வேண்டுமென்று வேண்டிக்
கேட்டுக்கொள்கிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்.
நிறுவனர் - தலைவர்
விசிக.