Ads Area

சவுதியில் மரணித்து 3 வருடங்களின் பின் நல்லடக்கம் செய்யப்பட்ட கேரளாவைச் சேர்ந்தவரின் ஜனாசா.

தொழில் நிமிர்த்தம் சவுதி அரேபியாவில் வேலை பார்த்து வந்து மரணமடைந்த வெளிநாட்டவர்  ஒருவரின் ஜனாசா 3 வருடங்களின் பின்னர் கடந்த வெள்ளிக் கிழமை (16-11-2018) சவுதி அரேபியா தமாம் நகரில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மரணமடைந்த குறித்த நபர் கேரளாவைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் என்றும் அவர் கடந்த 22 வருடங்களாக சவுதி அரேபியாவில் தொழில் புரிந்து வந்ததாகவும் சுகயீனம் காரணமாக 2015ம் ஆண்டு மரணமடைந்த நிலையில் அவர் பற்றியதும், அவரது உறவினர்கள் பற்றியதுமான எந்த வித தகவல்களும் தெரியாத நிலையில் அவரின் ஜனாசா தமாம் அல்-கோபாரில் வைத்தியசாலையில் பதப்படுத்தி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவர் மரணமடைவதற்கு 12 வருடங்களுக்கு முன் ஒரு தடவை தனது நாட்டுக்குச் சென்று வந்ததாகவும் அதற்குப் பிறகு விடுமுறைக்குச் செல்லவில்லை என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது  ஜனாசாவை உறவினர்களிடம் ஒப்படைப்பதற்காக சவுதி அரேபியா பல தடவை முயற்சி செய்தும் அவரது உறவினர்கள் தொடர்பாக எந்த வித தகவலும் கிடைக்கப் பெறாதிருந்த நிலையில் சமூக வலையத்தளங்களின் உதவியுடனும் மற்றும்  தமாமில் உள்ள சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் Nass Shoukat Ali Vokkam என்பவரின் உதவியுடனும்  இவரது குடும்பம் தொடர்பான தகவல் கிடைக் பெற்று தற்போது அவர்களது அனுமதியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பல வருடங்களாக தொடர்பில் இல்லாத தனது மூத்த மகனின் வருகைக்காக தாய் காத்திருந்ததாகவும், அவரின் வருகைக்காகவே அவரது 3 சகோதரர்களின் திருமணத்தை பிற்படுத்தி வைத்திருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது இருந்த போதும் தன் மகனைக் காண வேண்டும் என காத்திருந்த அந்த தாயும் மரணமடைந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தகவல் - saudigazette News
தமிழில் மொழிபெயர்ப்பு - சம்மாந்துறை அன்சார்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe