காரைதீவு சகா.
அகில இலங்கை மட்டத்தில் நடைபெற்ற அரச ஊழியர்களுக்கான ஆக்கத் திறன் போட்டியில் சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவப்படு்த்தி பங்கு பற்றிய ஆசிரியர் எம்.ஐ.அச்சி முஹம்மட் அவர்கள் பாடலாக்கத்தில் முதலாம் இடத்தினையும், கவிதையாக்கத்தில் இரண்டாம் இடத்தையும் பெற்று சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்துக்கு பெருமை ஈட்டித் தந்துள்ளார்.
முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்று வெற்றியீட்டிய ஆசிரியர் அச்சி முஹம்மட் அவர்கள் வலஸ்முல்ல தேசிய பாடசாலை கலாச்சார மண்டபத்தில் கௌரவிக்கப்பட்டார்.