அண்மையில் சவுதி அரேபியா மற்றும் கட்டார் நாடுகளில் பணிபுரிந்து வந்த நிறைய நம்மவர்கள் வயது வித்தியாசமின்றி அதிகளவில் மாரடைப்பினால் மரணமடைந்தமையின் காரணமாக ஒரு விழிப்புணர்வுக்காக இக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது அனைவரும் அவசியம் படிக்கவும், பகிரவும்.
உலகில் பெரும்பாலானோர் மாரடைப்பால் தான் இறக்கின்றனர். இதற்கு நமது ஆரோக்கியமற்ற மற்றும் மோசமான வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணம். அதிலும் கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை அன்றாடம் மக்கள் அதிகம் உட்கொண்டு வருவதால் தான் ஏராளமானோர் மாரடைப்பால் உயிரை இழக்கின்றனர்.
ஒருவருக்கு மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். யாராலும் எப்போது மாரடைப்பு வரும் என்று சரியாக கணிக்க முடியாது. மேலும் மாரடைப்பினால் உயிரை இழப்பதற்கு, அந்நேரத்தில் உதவிக்கு யாரும் இல்லாததும் ஓர் காரணம்.
சில ஆய்வுகளின் படி, தனியாக இருக்கும் போது, உதவிக்கு யாரும் இல்லாமல் மாரடைப்பு வந்து 80% மக்கள் உயிரை இழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
சில ஆய்வுகளின் படி, தனியாக இருக்கும் போது, உதவிக்கு யாரும் இல்லாமல் மாரடைப்பு வந்து 80% மக்கள் உயிரை இழந்திருப்பது தெரிய வந்துள்ளது.
சவுதி, கட்டார் போன்ற வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் உங்களின் வேலை பளு காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது. நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உள்ளீர்கள். திடீரென்று உங்கள் இதயத்தில் அதிக “வலி” ஏற்படுவதை உணர்கிறீர்கள்.
அந்த வலியானது மேல் கை முதல்தோள்பட்டை வரைபரவுவதை உணருகிறீர்கள். உங்கள் றுாமில் இருந்து மருத்துவமனை தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஆனால் உங்களால் அந்த தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது.
அந்த நேரம் உங்கள் உயிரை முடிந்தவரை காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும் இதோ படியுங்கள்.
பொதுவாக மாரடைப்பு வந்தால், ஒருவர் நினைவை இழக்கும் முன் 15 நொடிகள் தங்களுக்கு தாங்களே உதவ முடியும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். சில நேரங்களில் மாரடைப்பு வலியானது மெதுவாக ஆரம்பித்து, நீண்ட நேரத்திற்கு பின் கடுமையான வலியை உண்டாக்கும். ஆகவே லேசாக வலியை உணரும் போதே யாரையேனும் அழைத்து அல்லது அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று தப்பித்துக் கொள்ளலாம்.
தொடர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும்ப வேண்டும். ஒவ்வொரு முறை இருமுவதர்க்கு முன்னரும் மூச்சை இழுத்து விட வேண்டும், இருமல் மிக ஆழமானதாக இருக்க வேண்டும்.
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையில அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ, ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச்சை இழுத்து விட்டு இரும்பிக்கொண்டே இருக்க வேண்டும்.
மூச்சை இழுத்து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக்கிறது. இருமுவதால் இருதயம் நிற்பதில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக்கொண்டே இருக்க உதவும். இதனால் ரத்த ஓட்டம் சீரடையும்.
இருமுவதனால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும். பின்னர் இருதயம் சீரடைந்ததும், அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லலாம்.
குறிப்பு - சவுதி கட்டார் போன்ற நாடுகளில் பணிபுரியும் நம் சகோதரர்கள் அதிகமானோர் இவ்வாறான மாரடைப்பில் மரணமடைந்துள்ளதனால் சவுதி-கட்டார் நாட்டில் உள்ளவர்கள் என்று குறிப்பிட்டு இது எழுதப்பட்டுள்ளதே தவிர மற்றும் படி இது எல்லோருக்கும் பொருத்தமான பதிவாகும்.