Ads Area

எனது உயிருக்கு ஆபத்து நேர்ந்தால் ஜனாதிபதியே பொறுப்பு - றிஷாட் பதியுதீன் (வீடியோ இணைப்பு)

தற்போது பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியே இருந்து வருகின்றார் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அவரே பொறுப்பேற்க வேண்டும் என அகில இலங்க மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் கூறியுள்ளார்.

றிஷாட் பதியூதினை கொலை செய்யும் திட்டம் குறித்து நாமல் குமார வௌியிட்ட குரல் பதிவு தொடர்பில் அண்மையில் அகில இலங்கை மக்கள் சார்பில் பொலிஸ் தெலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக றிஷாட் பதியுதீன் இன்று காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றிருந்தார்.
அதன் பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார்.

தன்னை கொலை செய்யும் திட்டம் தொடர்பில் செய்தி வௌியாகியுள்ள நிலையிலும் தனக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe