நத்தார் பண்டிகையை முன்னிட்டு , நாடு முழுவதுமுள்ள மதுபானசாலைகளை நாளை மூடுமாறு, கலால் வரி திணைக்களம் அறிவித்துள்ளது.
சட்டத்தை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
இதற்காக கலால்வரி திணைக்களத்தின் அதிகாரிகள் சுமார் ஆயிரம் பேரளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.