Ads Area

சம்மாந்துறையில் இடம்பெற்ற SWDC இன் பசுமைப் புரட்சி அங்குராப்பண நிகழ்வு.

சம்மாந்துறையில் பசுமையை அதிகரித்து நிழல் மரம் சூழ்ந்த சம்மாந்துறையினை உருவாக்குவதற்காக  SWDC (Sammanthurai Welfare development council) அமைப்பினர் பசுமைப் புரட்சித் திட்டத்தினை ஆரம்பித்துள்ளனர் இதற்கமைய சம்மாந்துறை கைகாட்டி சந்தியில் இருந்து நெய்நாகாடு வரையான பாதைகளின் இரு மருங்கிலும் 300 மரக் கன்றுகளை நட்டு பராமரிப்பதற்கான வேலைத்திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றது.


இத்திட்டத்திற்கு, SWDC (Sammanthurai Welfare development council) இன் வேண்டுதலுக்கு இணங்க அரசாங்கத்தினால்  தேவையான நிழல் தரும் மரங்கள் கிடைக்கப் பெற்று அதில் முதற்கட்டமாக 50 மரக் கன்றுகளை நட்டு வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.

இத்திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றி எமது எதிர்கால சந்ததிகளுக்கு அழகிய ஊரினை பெற்றுக்கொடுப்பது எமது கூட்டுப் பொறுப்பாகும். இதற்கு சகலரும் சேர்ந்து உழைக்க வேண்டும். குறைந்தது ஒவ்வொருவரும் ஒரு மரத்தையேனும் பராமரித்து செழிப்பான ஊரினை கட்டி எழுப்ப ஒன்றிணைய வேண்டும் என SWDC அமைப்பினர் வேண்டிக் கொள்கின்றனர்.




















Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe