சம்மாந்துறை தாருஸ்ஸலாம் பாடசாலை கிழக்கு வீதி வடிகானுடன், காபட் வீதியாக செப்பனிடும் வேலைத்திட்டம் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான கெளரவ ரவூப் ஹக்கீம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படுகின்றது.
இவ்வீதியினை முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம்.மாஹிர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டதுடன் பிரதேச மக்களின் குறைபாடுகளையும் கேட்டரிந்து கொண்டார்.