Ads Area

ஐ.தே.கட்சி போட்ட பிச்சையால் ஜனாதிபதியான மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும்.

ஐ.தே.கட்சி போட்ட பிச்சையால் ஜனாதிபதியான மைத்திரியின் சர்வாதிகாரப் போக்கு விரைவில் அடங்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று புதன்கிழமை (05)  மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்துரைத்துள்ள அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 225 பேரும் கையொப்பமிட்டுக் கொடுத்தாலும், பிரதமர் பதவியைத் தனக்கு வழங்கமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரி இறுமாப்புடன் தெரிவித்துள்ளார் என்றும் ஐ.தே.க போட்ட பிச்சையால் ஜனாதிபதியான அவர், நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதாகச் சத்தியம் வழங்கிவிட்டு, அந்தச் சத்தியத்தை நிறைவேற்றாமல் செயற்படுகின்றாரெனக் கூறியுள்ளார்.

தன்னால் நாடு சீரழிந்ததென்று வாய் கூசாமல் ஜனாதிபதி கூறுவதாகவும் உண்மையில், யாரால் இந்த நாடு சீரழிந்துப் போகின்றதென்பது, பாமர மக்களுக்குக்கூடத் தெரியுமென்றும் தெரிவித்துள்ள விக்கிரமசிங்க, தன்னை விமர்சிப்பதற்கு, ஜனாதிபதி மைத்திரிக்கு எந்த அருகதையும் இல்லை என்பதைக் கூறிவைக்க விரும்புவதாகக் கூறியுள்ளார். .

கடந்த ஜனாதிபதித் தேர்தலில், மக்களால் தோற்கடிக்கப்பட்டவருடன் கைகோர்த்து அவருக்கு சட்டவிரோதமான முறையில் பிரதமர் பதவியை வழங்கி நாட்டின் நற்பெயரை ஜனாதிபதி கெடுத்துவிட்டாரென்றும் அவர் நியமித்த போலிப் பிரதமரும் போலி அமைச்சர்களும், நீதிமன்றத்தின் தீர்ப்பால் முகவரியற்றுப் போய்விட்டார்கள் என்றும் சுட்டிக்காட்டியுள்ள ஐ.தே.க தலைவர், இறுதியில் ஜனநாயகமே வெல்லுமென்றும் சர்வாதிகாரம் பொசுங்கிப் போகுமென்றும் சூளுரைத்ததோடு, ஜனாதிபதியின் சர்வாதிகார ஆட்டமும் விரைவில் அடங்கும். இது உறுதியென்றும் கூறியுள்ளார்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe