ஏ.ஜே.எம்.ஹனீபா.
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்தில் 2018 மகா போகத்தில் வரட்சி காரணமாக விவசாய தொழில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 5000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் பிரதம அதீதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு கே.விமலநாதன் கலந்து சிறப்பித்தார் கௌரவ அதீதியாக அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம்.சப்றாஸ் மற்றும் உதவிப் பிரதேச செயலாளர் ஆசீக் உட்பட பலர் கலந்து கொண்டர்.