மத்திய கிழக்கு நாடுகளில் இவ் வருடம் 220 இலங்கையர் மரணமடைந்துள்ளதாகவும் அதில் 31 பேர் தற்கொலையின் மூலம் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வெளிநாடுகளில் பணிபுரிந்த 220 இலங்கைப் பணியாளர்கள் வெவ்வேறு காரணங்களால் உயிரிழந்துள்ளனரென வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இதில் 52 பெண்கள் உள்ளடங்குவதுடன் 6 பெண்கள் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாகவும் பணியகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் வாகன விபத்துகளால் 21 இலங்கையர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர்.