Ads Area

நிறைவேற்று அதிகாரத்தை பயண்பத்த ஜனாதிபதி வெட்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி அவர்கள் தற்போது நிறைவேற்று அதிகாரத்தைப் பயண்படுத்தியே சகல விடையங்களையும் செய்து வருகின்றார்கள் அவர் நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்துவதற்காக வெட்கப்பட வேண்டும் என ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில்  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார், இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,

செயலாளர்களை அழைத்து பேசவோ அல்லது அவர்களுக்கு ஆணையிடவோ ஜனாதிபதிக்கு இப்போது அதிகாரம் இல்லை. நீதிமன்ற உத்தரவை அவர் மதிக்க வேண்டும். நாங்கள் ரணிலை பிரதமராக நியமிக்க இப்படி அழுத்தம் வழங்கினால் தாம் பதவி விலக வேண்டி வருமென ஜனாதிபதி எங்களிடம் சொன்னார். அது அவரின் இஷ்டம். நாடு மோசமான நிலையை அடைந்துள்ளது. அரசை எப்படி எடுப்பது என்பது எங்களுக்கு தெரியும். எங்களை அந்த நிலைக்கு தள்ளாமல் ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe